திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை 9 மணிக்கு ஈரோட்டில் உள்ள சித்தோடு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
மு.க. ஸ்டாலின் ஈரோடு பிரச்சாரம்
அந்த வகையில் இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோட்டில் பிரச்சாரம் நடத்தினார்.பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, திராவிட பேரூர் தான் இந்த ஈரோடு புதிய விடியலை தந்த திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார். பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை. பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் கலைஞர் இல்லை. கலைஞர் இல்லையென்றால் நாம் இல்லை என்று கூறினார். நம்மை எதிர்த்து வாக்கு கேட்கிறவர்கள் நாங்கள் என்ன செய்தோம் என கேட்கிறார்கள். திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் வீட்டுக்கு ஒருவராவது இருக்கின்றனர். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் முழுக்க என்னால் நாள் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்க முடியும் என்று கூறினார்.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
திராவிட மாடல் என்பது வளர்ச்சி மாடல்
திராவிட மாடல் என்பது வளர்ச்சி மாடல் அனைத்து தரப்பு மக்களுக்கான வளர்ச்சியாக இருக்க திட்டமிட்டோம். அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி காட்டிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான் என்று கூறினார். மேலும் கலை அறிவியல் கல்லூரிகளை அமைத்திருக்கிறோம் 70 ற்கும் மேற்பட்ட பூங்காக்களை அமைத்துள்ளோம். தன்னுடைய அரசின் சாதனைகளை சொல்ல எடப்பாடி பழனிசாமி பிரதமர் இடமும் எதுவும் இல்லை. மத்திய அரசின் சாதனை லிஸ்ட் நம்மிடம் இல்லை. ஆனால் அவர்களின் துரோக லிஸ்ட் உள்ளது. நீட் துரோகம், மெட்ரோ ரயில் நிலைய துரோகம் ,ஜிஎஸ்டி நிதி ,கல்வி நிதி என மத்திய அரசின் துரோக அதிர்ஷ்டநிதி கல்வி நிதி என மத்திய அரசின் துரோக லிஸ்ட் பெரியது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
பாஜக துரோக பட்டியல் பெரியது
தொடர்ந்து பேசிய முதல்வர் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு காரண தண்டனை விதிக்க கூடிய அளவிற்கு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். டிஜிட்டல் குற்றங்களுக்கும் கடுமையான தண்டனங்களை கொண்டு வந்துள்ளோம். ஒரு குற்றம் நடந்தால் எவ்வளவு துரிதமாக நடவடிக்கையை எடுத்து குற்றவாளியை தள்ளுகிறோம் என்பது வைத்துத்தான் அரசின் செயல்பாடுகள் மதிக்கப்படும். அதன்படி 80 சதவீத வழக்குகளில் அறுபது நாட்களுக்கும் குற்ற பத்திரிகை தாங்கள் செய்யப்பட்டது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் தான். இந்தியாவிலேயே அதிகமான பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு இருக்கிறது பெண்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர். அதனால்தான் பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்கின்றனர்.
தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய திட்டம்
ஏராளமான தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் இந்த வளர்ச்சி, பாஜகவின் கிளை செயலாளராக இருக்கக்கூடிய பழனிசாமிக்கு எரிச்சலை தருகிறது. காலால் தவழ்ந்து சென்று காலை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். இந்த திமுகவும் ஸ்டாலினும் ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க விடுவதில்லை என்று பொறாமையில் இந்த பொய்களையும் புரளிகளையும் எடப்பாடி பழனிசாமி பரப்புகிறார் என்று முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். மேலும் பெண்களை பாதுகாத்து கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் அனுப்பி வைத்து தலை நிமிர வைத்திருப்பது திராவிட மாடல் அரசு. இந்த உண்மைகளை அவதூறுகளை பரப்பி மறைக்கலாம். திசை திருப்பலாம். தேசிய ஜனநாயக ஆட்சியை கொண்டு வந்து தமிழ்நாட்டை கபளீகரம் செய்யலாம் என கற்பனை கோட்டையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார்.
