மாலே,
20 வயதுக்குட்பட்டோருக்கான 8வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
4 முறை சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் முழு நேரத்திலும் கோல் எதையும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றது.
பெனால்டி ஷூட்-அவுட்டில் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், வங்காளதேச அணி 4-3 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் வங்காளதேசம் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
