சென்னை,
நடிகை கவிதா கவுஷிக் , காவல் துறை பின்னணியில் உருவாகும் தொடர்களில் பெண் போலீஸ் கதாபாத்திரம் பின்தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்துக்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “என் கெரியரில் நான் ஒருபோதும் பின்தள்ளப்பட்டதாக உணரவில்லை. கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்துவதே என் நோக்கம். திரை நேரத்தை விட, தாக்கமே முக்கியம்,” என்றார்.
எப்ஐஆர் தொடரில் சந்திரமுகி சவுதாலா என்ற பெண் போலீஸ் அதிகாரியாக நடித்ததன் மூலம் கவிதா கவுஷிக் பெரும் பிரபலத்தை பெற்றார். இந்த தொடர் 2006 முதல் 2015 வரை ஒளிபரப்பாகி, ரசிகர்களை கவர்ந்தது.
குடும்ப், கானி கர் கர் கி போன்ற தொடர்களிலும் நடித்துள்ள கவிதா, பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். தற்போது ’கப்டான்’ என்ற ஓடிடி தொடரில் நடித்துள்ளார்.
