தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனை தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதனையடுத்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது, சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘சூர்யா 47’ படத்திற்காக சூர்யா தோற்றத்தில் சிறிய மாறுதல்களைச் செய்துள்ளனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சூர்யா ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
