அமெரிக்கா – ஈரான் போர்: ஈரானின் கொடூரத்தை விளக்கிய டிரம்ப்

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியாதாவது, இந்தப் போர் ஒரே ஒரு விஷயத்தை பற்றியது:

ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க கூடாது. நாம் சுலைமானியை கொன்றுவிட்டோம். ஒருவேளை அவர்களிடம் சுலைமானி இருந்திருந்தால், நிலைமை முற்றிலும் வேறுவிதமாக இருந்திருக்கும். ஒருவேளை நாம் அப்போதும் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அது மிகவும் கடினமாக இருந்திருக்கும், ஏனென்றால் நாம் அவர்களின் நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம், அதை செய்ய நான் வெறுக்கிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க மக்கள் நாம் தாயகம் திரும்புவதை காண விரும்புகிறார்கள். அது என் கையில் இருந்தால், நான் எண்ணெயை எடுத்துக்கொள்வேன், எண்ணெயை வைத்துக்கொள்வேன், நான் நிறைய பணம் சம்பாதிப்பேன். ஈரான் மக்களையும், இதுவரை அவர்கள் கவனிக்கப்பட்டதை விட மிகச் சிறப்பாக கவனித்துக்கொள்வேன்.

ஈரான் மிகவும் கொடூரமாக இருக்கிறது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரை ஈரான் 45,000 பேரை கொன்றிருக்கிறார்கள். எனவே, என் கையில் தேர்வு இருந்தால், நான் எண்ணெயை வைத்துக்கொள்வேன். ஆனால், நம் நாட்டு மக்களையும் நான் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறேன்.

பெரும்பாலான மக்கள் அதைப புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். வெனிசுலா விவகாரம் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. தற்போது ஹூஸ்டனில் பல பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. வெனிசுலா தலைவர்களுடனான உறவு அற்புதமாக இருந்து வருகிறது. நமக்கு ஒரு நீண்டகால, மிக நல்ல உறவு இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என டிரம்ப் கூறினார்.

Source link