மதுரை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. மதுரை மத்தி தொகுதியில் திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தான் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன். இவர் மீண்டும் அதே தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிடுகிறார். இன்று தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது அவர் பேசியதாவது:-
மதுரைக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் நினைத்த எதையும் என்னால் செய்ய முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், இதற்கு மேல் அரசியலில் இருப்பவர்களால் அதிகம் வெளிப்படையாக பேச முடியாது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
