சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்த விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் பாரம்பரிய மத நடைமுறையை ஆதரித்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விரிவான எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பித்துள்ளது.
9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரணைக்கு முன்பாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மூலம் 246 பக்க மனுவை சமர்ப்பித்துள்ளது. இந்த மனு, கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் மனுவில், சபரிமலையில் 10–50 வயதுடைய பெண்கள் நுழைவு தடையானது நூற்றாண்டுகள் பழமையான மத நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றியதாக கூறப்பட்டுள்ளது. ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என வணங்கப்படுவதால், இந்த நடைமுறை உருவானது என்றும் விளக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு தீர்ப்பில் பெண்கள் விலக்கல் அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், அந்த நடைமுறை அத்தியாவசியமா என்பதை அந்த மதத்தை பின்பற்றும் பக்தர்களே தீர்மானிக்க வேண்டும்; நீதிமன்றம் அல்ல என மத்திய அரசு வாதிட்டுள்ளது.
மேலும், இந்த நடைமுறை பெண்களுக்கு எதிரானது அல்ல; கோயிலின் வழிபாட்டு தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கினால், கோயிலின் வழிபாட்டு இயல்பே மாறிவிடும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மத நம்பிக்கை, சடங்குகள் போன்றவை பொது ஒழுங்கு, ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறாத வரையில், அவற்றில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Post
Tue Apr 7 , 2026
வயிற்றின் உட்புறச் சுவரில் அசாதாரண (புற்றுநோய்) செல்கள் வளரும்போது வயிற்றுப் புற்றுநோய் தொடங்குகிறது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி, வாழ்க்கை முறைத் தேர்வுகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமாகவே ஆகும். இதனுடன், மரபணுக் காரணிகளும் இந்த அபாயத்தைப் பாதிக்கக்கூடும். உங்கள் உணவில் உள்ள சில உணவுகள், உங்கள் வயிற்றைப் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதோடு, உங்கள் உடலின் ஒட்டுமொத்த நலனையும் பராமரிக்க உதவும். புற்றுநோயைத் தடுத்து நிறுத்தி, ஆரோக்கியமாக இருக்க […]

