தேர்தல் பரப்புரையை துவங்கிய சசிகலா.. அதிமுகவுக்கு பாதிப்பா.. சட்டென டிடிவி தினகரன் அளித்த பதில் – ammk ttv dhinakaran comments on 2026 assembly election sasikala campaign

சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகளை அனைத்து கட்சிகளும் துவங்கி விட்டன. ஒருப்பக்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களது பரப்புரைகளை துவங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்றைய தினம் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இபிஎஸ் மீது கடும் விமர்சனம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். அதே நேரம் சசிகலா, ஓபிஎஸ் இருவரையும் அதிமுகவில் இணைத்து கொள்வதற்கு இபிஎஸ் தயாராக இல்லை. தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ் திமுகவில் இணைந்து விட்டார். அவர் தற்போது திமுக வேட்பாளராக போடி தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

அஇபுதமமுக வேட்பாளர்களை ஆதரித்து சசிகலா பரப்புரை
அதே நேரம் சசிகலா தனியாக கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். அவருடைய இந்த அரசியல் வருகை அதிமுகவுக்கு பாதிப்பாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் சசிகலா தேர்தல் பரப்புரை காரணமாக அதிமுக கூட்டணிக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது என தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். அதாவது நேற்றைய தினம் சசிகலா தனது அஇபுதமமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

டிடிவி தினகரன் விளக்கம்
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திமுகவுக்கு மாற்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான். உதயசூரியனுக்கு மாற்று என்றால் இரட்டை இலை தலைமையிலான கூட்டணி தான். எனவே மற்ற கட்சிகளால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. புதிய கட்சியின் வருகையால் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் பாதிக்காது என்று சசிகலா பெயரை குறிப்பிடாமல் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தில் வேதனை
இதனிடையில் சோழவந்தானில் அஇபுதமமுக சசிகலா பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், நான் சிறை செல்ல வேண்டிய சூழல் உருவான சமயத்தில் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டுமென ஒருவரை பதவியில் அமர்த்தினேன். அவர்களே மூன்று மாதத்தில் கட்சியை விட்டு என்னை நீக்கி விட்டனர் என மிகவும் வேதனையுடன் பேசினார் சசிகலா. அதே போல் வாடிப்பட்டியிலும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

இரட்டை இலை சின்னம்
மேலும், டிடிவி தினகரன் நேற்றைய தினம் பரப்புரையை துவங்கிய நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இல்லை சின்னத்துக்கு வாக்கு கேட்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அதோடு எங்களுக்குள் இருந்த சண்டை என்பது அண்ணன், தம்பிகளுக்கு இடையிலானது தான். பங்களிக்குள் இடுந்த சண்டையை போலத்தான் எங்களுக்கு மத்தியில் இருந்தது.

அமித்ஷாவின் முயற்சி
பாஜக தான் எங்களை எங்களை ஒன்று சேர்த்து வைத்தது என்பதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. அமித்ஷாவின் முயற்சியின் காரணமாக தான் நாங்கள் ஒன்று சேர்ந்தோம் என தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். இதனிடையில் அவருடைய அமமுக கட்சிக்கு என்டிஏ கூட்டணியில் 11 சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரனின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link