கனிமொழி கருணாநிதி தீவிர பிரச்சாரம் :
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கவிதா தண்டபாணியை ஆதரித்து, திமுக கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,
அப்பொழுது பேசிய அவர்:
10 தோல்வி பழனிச்சாமியை 11 தோல்வி பழனிச்சாமியாக்க வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி வெற்றிப்பெற்றால், முதல்வராக இருப்பது அல்லது வேறு மாநிலத்திற்கு ஆளுநளராக இருப்பாரா என்பது தெரியவில்லை பாஜக அதிமுக கட்சியை அழித்துவிடும்.
நேற்று நாட்றம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர். கே.சி.வீரமணியின் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க வந்தவர்களை அதிமுகவினர் தாக்கி அராஜகத்தில் ஈடுப்பட்டுள்ளனர், அவர்கள் வெற்றிப்பெற்றால், அராஜகத்தில் தான் ஈடுப்படுவார்கள் என பேசினார்.
