எல்.முருகனும், உதயநிதியும் சேர்ந்துகொண்டுதான் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ண விடவில்லை என தவெகவின் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜனநாயகன் படம் சர்ச்சை
இதற்காக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். இதற்கிடையே தவெக தலைவர் விஜய் கடைசிமான படமான ஜனநாயகன் இன்னும் வெளியிடப்படமால் உள்ளது. இதற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதற்கு பின்னால் திமுகவும், பாஜகவும் அரசியல் செய்வதாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இது தவெக தலைவர் விஜய் பேசியிருந்தார்.அப்போது ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் திமுகவும் , பாஜகவும் சூழ்ச்சி செய்வதாக கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.தொடர்ந்து திமுகவை ஆட்சியில் இருந்து ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென்று விஜய் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.
விஜய் நிற்கும் தொகுதியில் டிவிஸ்ட்? இது என்ன புதுசா?
ஜனநாயகன் படம் குறித்து விஜய் பேசிய இரண்டு தினங்களுக்கு பிறகு நேற்று அப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் லீக்கானது. இது படக்குழு மற்றும் விஜய் தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா, ஜனநாயகன் படம் லீக்கானது குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதவாது:ஜனநாயகன் படத்தின் காட்சிகள் வெளியீடு என்பது தவெக தலைவர் விஜய்க்கு விடுத்த மிரட்டலாக தான் பார்க்கிறேன்.பாஜக எந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்து இந்த படத்தை வெளியிட முடியாமல் தடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
எல் முருகன் – உதயநிதி அரசியல் சதி
உயர்நீதிமன்றத்தில் படத்தினை வெளியிட தணிக்கை சான்றிதழ் வழங்கிவிடுங்கள் என்று கூறிய இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் எந்த வழக்குகளில் கிடைக்காத நீதி ஒன்றிய அரசு பாஜக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.அதற்கு எல்லாம் பின்புலமாக இருந்தவர் மத்திய இணையமைச்சர் எல். முருகன். இந்த படத்தை நிறுத்த வேண்டும் என்றும், அதிமுகவுக்கு உதவ வேண்டுமென்று எல்லா விதத்திலும் அழுத்தம் கொடுத்தார்.மத்திய இணையமைச்சர் எல் முருகனுடன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். இருவரும் சேர்ந்துதான்.
ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு
ஜனநாயகன்படத்தை ரிலீஸ் பண்ணவே விடவில்லை. இதுதான் உண்மை. இதற்கு ஒன்றிய அரசில் இயங்கக்கூடிய பாஜக தலைவர்களும் சப்போர்ட் செய்தார்கள். இத்ற்கு திமுகவும் உடந்தை. அதன் காரணமாக தான் இன்றுவரை படம் வெளியாவதற்கான காரணம். இதைத்தான் சமீபத்தில் நடந்த பரப்புரையின் தலைவர் விஜய் கூறினர் உதயநிதியும் எரிமுறைகளும் சேர்ந்ததற்கான ஆதாரம் உள்ளது. படத்திற்கு தடை கொடுத்த பிறகு, எல்.முருகன் பொங்கல் விழாவில்,உதயநிதி படக்குழுவினரை அனுப்பி வைத்தார்.அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆருக்கும் இதே போன்ற ஒரு நிலை தான் வந்தது. அப்போதும் எம்ஜிஆர் படத்தை வெளியிடவில்லை. அவருக்கு எதிராக வழக்கு போடப்பட்டது. அவதூறுகள் பரப்பப்பட்டது.
அவர்களது தொண்டர்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். மிரட்டல் விட்டார்கள். இது எல்லாம் கலைஞர் செய்ததுனால தான் 200 எம்எல்ஏக்களை வைத்திருந்த கலைஞர்199 77 ல் ஓர் எதிர்க்கட்சியாக கூட ஆக முடியாமல் பத்து வருடங்களாக ஆட்சியில் அமைக்க முடியாமல் எம்ஜிஆர் மறைவு வரை இருந்தார் கலைஞர். மக்களின் நம்பிக்கை இழந்தார். அது போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும் 2021 தேர்தலில் மக்கள் நம்பிக்கை பெற்றார். ஆனால் புதிய தலைவராக உருவாகக்கூடிய நபர் மீது கரூர் சம்பவத்தில் பிரச்சனை கொடுத்து குற்றச்சாட்டு, கொலையாளி என்று கூறி ,செந்தில் பாலாஜியை வைத்து மக்களுக்கான துன்பங்களை கொடுத்த திமுக அரசு மக்கள் தூக்கி எறிகிறார்கள்.ஆட்சியை இழப்பார் என்று ஆதவ் அர்ஜூனா கூறினார்.
