சிவகங்கை மாவட்ட எல்லையில் விஜயின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
தவெக விஜய் காரைக்குடி பிரச்சாரம்
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார் தவெக தலைவர் விஜய். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தன்னுடைய பிராச்சார வாகனத்தில் காரைக்குடி சென்றார். சாலையின் வழி நெடுகிலும் விஜய்க்கு தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது சிவகங்கை மாவட்டத்தின் மத்திய உள்ள எஸ்.எஸ் கோட்டை என்னும் இடத்தில்தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை வாகனத்தை வழிமறைத்து சோதனை செய்தனர்.
புதுச்சேரியில் விஜய் பேச்சு…தாக்கம் ஏற்படுமா?
சிவகங்கை எல்லையில் விஜய் வாகனத்தில் திடீர் ஆய்வு
அப்போது விஜய்யின் வாகனத்தில் பணம் மற்றும் மக்களுக்கு வழங்க பரிசுப்பொருள் வழங்க ஏதேனும் பரிசு பொருள் இல்லாததன் காரணமாக அதிகாரிகள் விஜய் வாகனத்திற்கு அனுமதி அளித்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்களான முதல்வர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி, நாதக சீமான், உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் வாகனங்களை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து காரைக்குடியில் இன்று தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி, மதியம் 12 மணி முதல் 2 வரை பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதனைத் தொடர்ந்து சிவகங்கையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக காரைக்குடி காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு 30 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
