100 டம்மி மின்னணு வாக்கு இயந்திரங்கள் பறிமுதல்.. சிக்கலில் திமுக வேட்பாளர் வைத்தியலிங்கம்.. – election flying squad seizes 100 dummy evm machines dmk candidate vaithilingam photo attached visiting cards

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படைகளும், கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாக்காளர்களுக்கு ஏதேனும் பணம் பட்டுவாடா செய்ய சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுகிறதா? தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையம், 100 அடி சாலை அருகே நேற்று (ஏப்.09) இரவு 11 மணியளவில் அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் ஐந்து பார்சல்கள் கொண்ட 100 பெட்டிகள் இருந்தன. இருந்ததையடுத்து, அது என்னவாக இருக்கும் என்று பறக்கும் படையினர் பெட்டியை திறந்து சோதனையிட்டனர்.

அந்த பெட்டிகளில் தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட 100 போலியான மின்னணு வாக்கு இயந்திரங்களை கண்டுபிடித்தனர். இந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் நிஜ வாக்கு இயந்திரங்களில் இருப்பது போன்றே போலியாக தயாரிக்கப்பட்டு இருந்தன. இத்துடன், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் புகைப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொட்டுகள் ஒட்டப்பட்ட அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், ஆட்டோவை ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர் கணேசன் மற்றும் பொருட்களை கொண்டு வந்த சேலத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆட்டோவில் இருந்த பொருட்கள் கோவையைச் சேர்ந்த SRK Manpower Company நிறுவன உரிமையாளர் சிவராமன் என்பவருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சிவராமன் தான் தனது ஊழியரான செல்வம் என்பவரை பார்சலை எடுத்து வர கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திமுகவின் தேர்தல் புதிய திட்டங்கள்!

அதுமட்டுமல்லாமல், வடபழனியில் இருந்து கோயம்பேடு வழியாக பார்சல் சர்வீஸ் மூலம் புதுக்கோட்டைக்கு அனுப்பத் திட்டமிட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 மின்னணு வாக்கு இயந்திரங்களையும், 20,600 அடையாள அட்டைகளையும் தேர்தல் பறக்கும் படையினர் அண்ணா நகர் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இம்மாதிரியான போலியான மின்னணு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, அக்கட்சியிலும் பகுதியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Source link