கும்பமேளா வைரல் மோனாலிசாவின் ரகசியம் அம்பலம்! – கணவருக்கு காத்திருக்கும் சிறை தண்டனை? – kumbh mela viral monalisa mystery exposed is a prison sentence awaiting her husband

கும்பமேளாவில் வைரலான மோனாலிசா கணவர் ஃபர்மான் கான் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்று சமூக வலைதளங்களில் ஒரே இரவில் வைரலானவர் மோனாலிசா. இவர் அண்மையில் தனது காதலனை பெற்றோர் எதிர்ப்பினை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்த செய்திகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இவர் 18 வயது பூர்த்தியடைதது பெரிய பேசுபொருளாக மாறியது. இதுதொடர்பான வழக்கில், அவர் ஒரு மைனர் என்பது தேசியப் பழங்குடியினர் ஆணையம் (NCST) நடத்திய விசாரணையில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.

விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்

தேசியப் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் தலைமையிலான குழு, மோனாலிசாவின் சொந்த ஊரான மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர் அரசு மருத்துவமனை ஆவணங்களை ஆய்வு செய்தது. அந்த ஆவணங்களின்படி, மோனாலிசா டிசம்பர் 30, 2009 அன்று பிறந்தவர் என்பது உறுதியாகியுள்ளது. இதன்படி, கடந்த மார்ச் 11, 2026 அன்று கேரளாவில் நடைபெற்ற திருமணத்தின் போது அவருக்கு 16 வயது மற்றும் 2 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

கணவர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்

மைனர் பெண்ணைத் திருமணம் செய்த குற்றத்திற்காக, மோனாலிசாவின் கணவர் ஃபர்மான் கான் மீது மத்தியப் பிரதேச போலீசார் பின்வரும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • போக்சோ சட்டம் (POCSO Act):
  • மைனர் பெண்ணுடன் உடலுறவு மற்றும் திருமணம் செய்தது.
  • பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act): மோனாலிசா பார்த்தி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்தச் சட்டம் பாய்ந்துள்ளது.
  • கடத்தல் மற்றும் ஆவண மோசடி தொடர்பான பிரிவுகள்.
ஆவண மோசடி மற்றும் அரசியல் சர்ச்சை

கேரளாவில் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக, மோனாலிசா மேஜர் (18 வயது கடந்தவர்) எனக் காட்டும் வகையில் போலி பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் போலி ஆவணங்களை உடனடியாக ரத்து செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கும்பமேளா வைரல் மோனாலிசாவின் ரகசியம் அம்பலம்! – கணவருக்கு காத்திருக்கும் சிறை தண்டனை?
மேலும், இந்த விவகாரத்தில் கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநில டிஜிபி-க்களுக்கு (DGP) சம்மன் அனுப்பியுள்ள ஆணையம், வரும் ஏப்ரல் 22, 2026 அன்று டெல்லியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.