Jagath Rakshakan About Eps,திமுக தொண்டர்கள் கொந்தளித்து இருக்கின்றனர்..கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம்..இபிஎஸ் பேச்சு குறித்து ஜகத்ரட்சகன் கருத்து – dmk mp jagath rakshakan about edappadi palanisamy speech

எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்காக பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த லிஸ்டில் தற்போது திமுக எம்.பி ஜகத் ரட்சகனும் இணைந்திருக்கிறார். முதலமைச்சர் குறித்தும் துணை முதலமைச்சர் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி பேசியது மிகப்பெரிய சர்ச்சையாகிவிட்டது. அதற்காக பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது திமுக எம்பி ஜகத் ரட்சகன் தன் கருத்தினை கூறியிருக்கின்றார்.

அவர் பேசியது, அரசியல் பக்குவமில்லாத பேச்சு, அரசியலில் இப்படியெல்லாம் பேசக்கூடாது. எங்க தொண்டர்கள் எல்லாம் கொந்தளித்து இருக்கின்றனர். என்னால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. தொண்டர்களை எல்லாம் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம். திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் தங்கம். நாங்கள் எல்லாம் ஒருபோதும் அப்படி பேசமாட்டோம். கலைஞர் குறித்து அவர் பேசுகின்றார். அதெல்லாம் மிகவும் தவறு.

கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சாப்பிடக்கூட மாட்டார். அப்படி இருக்கும்போது கலைஞரை சிறை வைத்தார் என பேசுகின்றார் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு என்ன தெரியும். அரசியலில் பக்குவமில்லாத பேச்சாக உள்ளது. இப்படியெல்லாம் பேச கூடாது என ஜகத் ரட்சகன் தன் கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றார். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து முக ஸ்டாலினையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக சாடி விமர்சனம் செய்து வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி என பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் முதல் திமுகவினர் பலரும் கூட்டணி கட்சித்தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நான் ஸ்டாலின் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என தெரிவித்தார்.

ஆனால் அவர் தவறாக தான் பேசியிருக்கிறார். கொரோனாவிலேயே ஸ்டாலின் போயிருப்பார் என தவறாக எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார் என பலர் அவர் பேசிய வீடியோவை குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி பால்டாயில் குறித்து பேசுவதும் கடும் கண்டனங்களை பெற்று வருகின்றது. CPI வீரபாண்டியன் கூட எடப்பாடி பழனிச்சாமி அரசியல் தலைவராக பேசுவதாக தெரியவில்லை.

சித்ரகுப்தனாக மாறி பேசிக்கொண்டு வருகின்றார் என கூறினார். எடப்பாடி பழனிச்சாமி திமுக குறித்தோ முக ஸ்டாலினின் ஆட்சி குறித்தோ விமர்சித்து பேசியிருந்தால் இதுபோன்ற கண்டனங்கள் வந்திருக்காது. ஆனால் தனிநபர் தாக்குதலாக அவரது விமர்சனங்கள் மாறியிருப்பதால் தான் இந்த சர்ச்சை எழுந்திருக்கிறது. மறுபக்கம் முதல்வரும் துணை முதல்வரும் தான் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் ஒரு எல்லையோடு அவர்கள் விமர்சனம் செய்து வருவதாகவும்,எடப்பாடி பழனிச்சாமிஎல்லைமீறி விமர்சிப்பதாகவும் பொதுமக்கள் பலர் கருதுகின்றனர். இவ்வாறு தேர்தல் நெருங்கி வரும் இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் சர்ச்சை பேச்சு கட்சிக்கு பின்னடைவாக அமையும் வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகின்றது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நான் தவறாக எதுவும் பேசவில்லை என விளக்கம் தந்துள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் மறுபக்கம் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கும் கனிமொழி பேச்சுக்கும் அண்ணாமலை தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தரக்குறைவாக பேசுகின்றார். மேலும் கனிமொழி மற்றும் முக ஸ்டாலின் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்களை திரித்து கூறுகின்றனர் என பேசினார் அண்ணாமலை.

Source link