வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகள்
அந்த வகையில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.அதிமுக 169தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) 11 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) 5 தொகுதிகளிலும், இந்திய ஜனநாயக கட்சி (IJK) 2 தொகுதிகளிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (TMMK)மற்றும் புரட்சி பாரதம் கட்சிக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டு உள்ளது.
வானதி கோவை தெற்கு தொகுதியில் போட்டி
அதன்படி, பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் கோவை வடக்கு தொகுதியும் ஒன்று. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசனுக்கு கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக வானதி சீனிவாசன் களமிறப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.அதன்பிறகு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் தன்னுடை அரசியல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
தொடர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட வானதி சீனிவாசன்
இந்த நிலையில், பிரச்சாரத்தின் முன்றாவது நாளான இன்று கோவை வடக்கு தொகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்தார்.அப்போது திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாஜக நிர்வாகிகள் கோவை தெற்கு பகுதியில் உள்ள கே.எம்.சி. ஹெச் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் பிரச்சாரம்
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததையடுத்து, குறைந்தது 48 மணி நேரம் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையிலும், நாளை காலை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் மற்றும் கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜுனன் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காண பாஜக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு படையெடுத்துள்ளனர்.
