பாஜக உளவுத்துறைக்கு சென்ற ரிப்போர்ட்
இதனால் அதிர்ச்சியில் இருந்த அண்ணாமலை கட்சி பணிகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது அது மட்டுமின்றி தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்தும் விலகியது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,அண்ணாமலை திடீரென்று டெல்லி சென்று அங்குள்ள முக்கிய புள்ளிகளை சந்தித்து பேசியுள்ளார். அதன்பிறகு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமாக பாஜகவிற்காக வாக்கு சேகரித்து வருகின்றார். இதனால், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுடன் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.இந்த சந்திப்பில் என்ன நடந்தது.இந்த மாற்றத்திற்கான காரணம் என்பன பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பேச ஆரம்பித்துள்ளனர்.
திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?
அண்ணாமலை டெல்லி பயணம்
இது குறித்து பாஜக வட்டாரத்தில் கேட்டபோது, தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மத்திய உளவு துறைக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வழியாக்கிய உள்ளது. அந்த அறிக்கையில் பாஜக அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் பாஜக தலைமையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தமிழ்நாட்டில் மிக அதிக ஆர்வத்துடன் பிரச்சார மேற்கொள்ள வேண்டாம் என்று நிலைப்பாட்டில் பாஜக தலைமை இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இதனால் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் பலமுறை தமிழகம் வந்திருந்தாலும், ஏப்ரல் மாதத்தில் ஒரே முறை மட்டும் வர திட்டமிட்டுள்ள பட்டதாக கூறப்படுகிறது .மேலும் பாஜக குறைந்த அளவில் போட்டியிடும் சென்னை கோவை மதுரை போன்ற பகுதிகளில் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கன்னியாகுமரியில் பாஜக பல தொகுதிகளில் போட்டியிடுவதால் அங்கு ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேதியும் பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாஜக புதிய ஸ்ட்ராட்டஜி
தற்போதைய அரசியல் நிலவரப்படி நாகர்கோவில் மற்றும் ராசிபுரம் தொகுதிகளில் பாஜகவுக்கு சற்று முன்னிலை இருப்பதாகவும் சாத்தூர், மொடக்குறிச்சி, அவிநாசி, கோவை வடக்கு ,விளவங்கோடு, திருப்பூர் தெற்கு, மயிலாப்பூர், வாசுதேவநல்லூர் போன்ற இடங்களில் போட்டி நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. மற்ற தொகுதிகளில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேசிய அளவேரான கட்சிகளாக இருக்கக்கூடிய பாமக, அமமுக விட குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றால் சரியாக இருக்கக் கூடாது என்பதற்காக பிரச்சாரத்தை தீவிர படுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அண்ணாமலைக்கு பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டர் வசதி செய்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
