தவெக உள்கட்சி பிரச்சனை
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, அஜிதாவிற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பொறுப்பு கொடுக்கவில்லை. அவருக்கு பதிலாக சாமுவேல் என்பவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழங்கினார்.
கடும் அதிருப்தியில் இருந்த அஜிதா தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள விஜயின் வீட்டிற்கு எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தேர்தல் வேலைகளுக்காக விஜய் சென்றபோது அவர் காரை வழிமறித்தார். இதனைத் தொடர்ந்து தனக்கு நீதி கோரி பனையூர் அலுவலகம் முன்பு ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கட்சி சார்பில் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அஜிதாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தினர். இது தவெகவில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
விஜய் போட்ட மாஸ்டர் பிளான்…களத்தில் நடக்கப்போகும் மாற்றம்?
திமுகவில் இணைந்த அஜிதா
இருப்பினும் அஜிதா கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி தூத்துக்குடி மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வீடு திரும்பிய அவர் ஒருபோதும் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலக மாட்டேன் தலைவர் விஜய்க்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.
மேலும் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அஜிதா காத்திருந்தார். ஆனால் அந்தத் தொகுதியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த சூழலை பயன்படுத்தி அஜிதாவை தங்களுடைய பக்கம் இழுக்க திமுக அதிமுக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் காய் நகர்த்தியது. மேலும் அஜிதாவிற்கும் அவரது ஆதரவாளர்கள் வேறு கட்சிக்கு செல்வோம் என்று அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி அரசியல் மாற்றம்
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி முன்னிலையில் அஜிதா திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கட்சியில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாத ஒரே காரணத்தினால் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்ததாக கூறினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அஜிதா திமுகவில் இணைந்தால் திருச்செந்தூர் பகுதி மீனவர்களின் வாக்குகளை அதிகமாக பெற முடியும் என கருதுவதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அஜிதா தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவர் திமுகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அஜிதா மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோர் திமுகவில் உள்ளனர் என்பதால் அஜிதாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனைத் தொடந்து விஜய்யின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன மாதிரியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
