Nirmal Kumar About Annamalai,இபிஎஸ் பற்றி அண்ணாமலை பேசிய விஷயங்கள்..அதற்கு அவரால் விளக்கம் கொடுக்க முடியுமா ? தவெக நிர்மல் குமார் கேள்வி – tvk nirmal kumar questioned annamalai over his remark on edappadi palanisamy

அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிரமாக பரப்புரை செய்து வருகின்றார். அவர் தேர்தலில் போட்டியிடாதது குறித்து சர்ச்சை எழுந்தாலும் மறுபக்கம் அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக தீவிரமாக பாடுபடுவேன் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கிடையில் அண்ணாமலை தனது பரப்புரையில் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என கூறி தான் பரப்புரை செய்து வருகின்றார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இருந்தாலும் அதையெல்லாம் மறந்து அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்காக பரப்புரை செய்துகொண்டு வருகின்றார். ஆனால் இதே கருத்தை முன் வைத்து திமுகவினர் விமர்சனம் செய்து வந்தனர். அதிமுக கூட்டணியில் எந்த ஒற்றுமையும் இல்லை, எடப்பாடி பழனிச்சாமி குறித்து கடுமையாக பேசியவர்கள் தான் தற்போது அவருடன் கூட்டணி வைத்திருக்கின்றனர் என கூறி வருகின்றனர்.

நிர்மல் குமார் பேச்சு

அதே கருத்தை முன் வைத்து தான் தற்போது தவெகவினரும் விமர்சித்து வருகின்றனர். தவெக நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலையை கேள்வி கேட்டுள்ளார். அதாவது ஓராண்டிற்கு முன்பு அண்ணாமலைஎடப்பாடி பழனிசாமியை எப்படியெல்லாம் பேசி விமர்சனம் செய்திருக்கின்றார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தது தவறு என்பது போல பேசி வந்தார். மேலும் அவரையும் கடுமையாக விமர்சித்தார்.

நான் பாஜக கட்சியின் வளர்ச்சிக்காக தான் இந்த பொறுப்பில் இருக்கின்றேன். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதற்காக நான் இல்லை என கடுமையாக பேசினார் அண்ணாமலை. ஆனால் தற்போது அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக வேண்டும் என சொல்கின்றார். இதற்கு மட்டும் விளக்கம் கொடுக்க சொல்லுங்கள், எடப்பாடி பழனிச்சாமி பற்றி கடுமையாக பேசிய அதே அண்ணாமலை தான் தற்போது அண்ணன் முதல்வராக வேண்டும் என்கின்றார்.

அண்ணாமலை -எடப்பாடி பழனிச்சாமி சர்ச்சை

இப்படி மாற்றி பேசுவதற்கான காரணத்தை அண்ணாமலை விளக்குவாரா ?அதோடு மட்டுமல்லாமல் அதிமுகfiles ஐ வெளியிடுவேன் என்றெல்லாம் அண்ணாமலை கூறினார். அதிமுகவினர் ஊழல் செய்ததை எல்லாம் வெளியிடுவேன் என்றெல்லாம் பேசினார் அண்ணாமலை. அதெல்லாம் என்ன ஆனது ? எனவே அவர் சொல்வதெல்லாம் மிகப்பெரிய பொய். இன்னும் சில நாட்கள் கழித்து அப்படியே மாற்றி பேசுவார் என அண்ணாமலையை விமர்சித்தார் நிர்மல் குமார்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் திமுகவை தொடர்ந்து விமர்சிக்கின்றனர். திமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை, திமுக தங்களுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளை அடிமையாக்கி வருகின்றனர் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதே சமயம் திமுக மட்டுமல்லாமல் தவெகவும் தற்போது அதிமுக கூட்டணி குறித்து கடுமையாக பேசி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இருக்கின்றன.

அதிமுக கூட்டணி

இவர்கள் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதே சமயம் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்தும் இருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமிகுறித்து அன்புமணி, டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை என அனைவரும் கடுமையாக பேசி இருக்கின்றனர். அப்படி பேசியவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்திருக்கின்றனர். எனவே இந்த கூட்டணியை மக்கள் எப்படி நம்புவார்கள் என்பது தான் திமுக தரப்பு வாதமாக உள்ளது.

இதே வாதத்தை முன் வைத்து தான் தவெகவினரும் பேசி வருகின்றனர். டிடிவி தினகரன் எங்களுக்குள் மோதல் இருந்தது, அமித் ஷா தான் எங்களை ஒன்றிணைத்தார் என கூறினார். எனவே ஏற்கனவே மோதல் ஏற்பட்டு தற்போது இணைந்திருக்கும் இவர்கள் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் மோதிக்கொள்ளமாட்டார்கள் என்பதில் எந்த நிச்சயம் ? என்பது தான் கேள்வியாக இருக்கின்றது.

தற்போது தவெக நிர்வாகி நிர்மல் குமார் அண்ணாமலையிடம் எடப்பாடி பழனிச்சாமி குறித்து முன்பு பேசியதற்கு விளக்கம் கேட்டிருக்கிறார். எனவே இதுகுறித்து அண்ணாமலை பேசுவாரா ? நிர்மல் குமாரின் கேள்விகளுக்கு பதில் தருவாரா ? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source link