தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாமல் இருந்து வந்தது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 27 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவில்லை. காங்கிரஸ் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு..
ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை
சோளிங்கர் – முனிரத்னம்
விளவங்கோடு – பிரவீன்
கிள்ளியூர் – ராஜேஷ்குமார்
ஊத்தங்கரை – குப்புசாமி
ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ்
அறந்தாங்கி – ராமசந்திரன்
காரைக்குடி – எஸ்.மாங்குடி
பொன்னேரி – துரை சந்திர சேகர்
வேலச்சேரி – ஹச்சன் மவுலானா
திருவாடானை – ராம.கருமாணிக்கம்
பொன்னகரம் – ஜி.கே.எம்.தமிழ்குமரன்
கவுண்டம்பாளையம் – சூர்யபிரகாஷ்
சிங்காநல்லூர் – ஸ்ரீ நிதி நாயுடு
துறையூர் – விச்சு லெனின் பிரசாத்
கடலூர் – சந்திரசேகரன்
மயிலாடுதுறை – ஜமால் யூனுஷ் முகமது
கிருஷ்ணகிரி – செல்வக்குமார்
ஆத்தூர்(சேலம்) – அர்த்தநாரி
ஈரோடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன்
உதகை – ராமசந்திரன்
நாங்குநேரி – ரூபி மனோகரன்
கிள்ளியூர் – ராஜேஷ்குமார்
குளச்சல் – தாரகை கத்பட்
சங்கரன் கோவில் – சங்கை கனேசன்
சிவகாசி – கனேசன் அஷோக்
உசிலம்பட்டி – சரவண குமார்
