Director Ameer About Tvk Vijay,விஜய் எடுத்த முடிவு சரிதான்..ஆனால் தவெகவினர் பேசுவதில் முரண் உள்ளது : அமீர் – movie director ameer about tvk leader vijay stand

தவெக தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்ற முடிவை எடுத்துவிட்டார். இந்த முடிவு குறித்து பல கருத்துக்கள் உலா வந்துகொண்டு இருக்கும் நிலையில் திரைப்பட இயக்குனர் அமீர் தன் கருத்தினை கூறியிருக்கின்றார்

முக்கிய அம்சங்கள்:

தவெக தலைவர் விஜய் எடுத்த முடிவு

இயக்குனர் அமீர் கருத்து

director ameer about tvk vijay
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது. முன்பு தவெக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என கணிக்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தவெக இணையலாம். பாஜகவுடன் தவெக விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்றும் சொல்லப்பட்டது. கட்சியை துவங்கியதும் தங்களது கொள்கை எதிரி பாஜக என அறிவித்த விஜய் அவர்களுடனே கூட்டணி சேர போகிறாரா ? என்ற விமர்சனங்கள் எழுந்தது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது விஜய் தேர்தலில் கூட்டணி வேண்டாம், தனித்தே போட்டியிடலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டார் என சொல்லப்படுகின்றது. விஜய்யின் இந்த முடிவை பெரும்பாலானோர் வரவேற்று வருகின்றனர். அப்படி வரவேற்பதில் ஒருவராக திரைப்பட இயக்குனர் அமீர் இருக்கின்றார். என்னதான் அமீர் திரைப்படத்துறையை சார்ந்தவராக இருந்தாலும் தனது மனதில் பட்ட அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக பேசுவார்.
அப்படி தான் தற்போது தவெக தலைவர் விஜய் எடுத்த முடிவு குறித்தும் அவர் பேசியிருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என விஜய் எடுத்த முடிவு சரியானது தான், அந்த முடிவை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்ததா ? இல்லையா ? மறைவாக என்ன நடந்தது என்பதும் தெரியாது ? ஆனால் அவர் எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது.
இருப்பினும் தவெக தலைவர்கள் பேசுவதில் முரண் உள்ளது. நாங்கள் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என சிலர் சொல்கின்றனர். மறுபக்கம் ஒரு சிலர் ஆட்சியில் பங்கு ,90 தொகுதிகள் என சொல்கின்றனர். இப்படி தவெகவினர் இடையே முரண்கள் உள்ளது. ஒட்டுமொத்தத்தில் அரசியல் களத்திற்கு வருபவர்களை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என வருபவர்களை முதல் பார்வையிலேயே சந்தேகப்பட வேண்டாம் என்பது தான் என் கருத்து என்றார் அமீர்.
இவ்வாறு விஜய்யின் நிலைப்பாடு குறித்து அமீர் தன் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இந்நிலையில் விஜய் தேசிய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் அவருக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தியிருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. அவ்வளவு ஏன், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையே விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் நாங்கள் கூடுதலான தொகுதியில் வெற்றிபெறுவோம்.
200 தொகுதியில் வெற்றிபெற இருக்கும் நாங்கள் கூடுதலாக 210 தொகுதியில் வெல்வோம் என்றார். அப்படியென்றால் விஜய் தனித்து போட்டியிட்டாலே பல தொகுதிகளில் வெற்றிபெறலாம். அதுவே தேசிய ஜனநாயக கூட்டணியோடு இணைந்தால் மக்களின் நம்பகத்தன்மையை விஜய் இழக்க நேரிடும். அப்படி மக்களின் நம்பிக்கையை இழந்தால் அவர் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளும் அவரை விட்டு செல்லும். எனவே விஜய் எடுத்திருக்கும் முடிவு மிக சரியானது என்பது தான் பலரது கருத்தாக உள்ளது.
ஏற்கனவே பல கருத்துக்கணிப்புகளில் திமுக மற்றும் அதிமுகவிற்கு விஜய்யின் தவெக கடும் போட்டியாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. இந்த தேர்தலில் தவெக –திமுகமற்றும் அதிமுக இடையே மும்முனை போட்டி நிலவும் என கணிக்கப்படுகின்றது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு விஜய் எடுத்த முடிவு தான் சரி என தெரிகின்றது.

விஜய் சீட் பேர அரசியல் செய்ய மாட்டார்! மக்கள் நினைப்பது இது தான்_

ஆனாலும் விஜய் பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாரா ? அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணி வைக்கவில்லையா ? என்பதெல்லாம் வேறு விஷயம். கடைசியில் பாஜகவுடன் அவர் கூட்டணி அமைக்காமல் இருப்பது தான் அவரின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது என்கின்றனர் பலர்.