ICU-வில் 4 மணி நேர மின்தடை.. உயிருக்கு போராடிய நோயாளிகள்-கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன? – cuddalore government hospital patients suffer due to power outage

கடலூர் அரசு மருத்துவமனையில் ஐசியு வார்டில் நான்கு மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் அவதி உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அரசு மருத்துவமனை மின்தடை(புகைப்படங்கள்Samayam Tamil)
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றன. அதேபோல் 5க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றன.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு அரிசி வார்டு பெண்கள் வார்டு மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்காக தனித்தனி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கடலூர் மாவட்டம் மட்டும் இன்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மருத்துவ சேவைக்காக வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கிய சிகிச்சைகள் நடைபெறும் நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் மருத்துவமனையின் எமர்ஜென்சி ஐ சி யூ மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த மின்தடை சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டன. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் தேவையுடைய நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டன.

ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!

அரசு மருத்துவமனை திடீர் மின்தடை

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் டார்ச் லைட் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டான நிலை உருவானது. மேலும் அரசு தலைமை மருத்துவமனையில் இதய நோய் சுவாச கோளாறு போன்று கடுமையான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மின்சாரம் இல்லாததால் தேவையான மருத்துவ உபகரணங்களை முழுமையாக பயன்படுத்த முடியாமல் மூச்சு விடுவதில் கடுமையாக அவதிப்பட்டனர்.
சிலருக்கு சிகிச்சை தாமதமாகும் நிலையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களில் இத்தகைய மின்தடை ஏற்பட்டது. நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவுகளில் மின்சார வசதி தடை இன்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.

உயிருக்கு போராடிய நோயாளிகள்

மேலும் இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு தலைமை மருத்துவமனைக்கு மின்சார வசதியை விரைவாக சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருவது தொடர்கதையாக உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது. அதிகாரிகளின் கடமையாக உள்ளது. மேலும் விலை மதிப்புள்ள மனித உயிர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.