Minister Periyakaruppan About Ops,ஜெயலலிதா கண்டெடுத்த வைரம் ஓபிஎஸ்..அவரின் மதிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை : அமைச்சர் பெரியகருப்பன் – minister periyakaruppan appreciation for o.panneer selvam

ஓபிஎஸ் திமுகவிற்காக பரப்புரை செய்து வருகின்றார். இதற்கிடையில் அமைச்சர் பெரியகருப்பன் ஓபிஎஸ் அவர்களை மனதார பாராட்டி பேசியிருக்கிறார். ஜெயலலிதா கண்டெடுத்த வைரம் என ஓபிஎஸ்க்கு புகழாரம்

முக்கிய அம்சங்கள்:

ஜெயலலிதா கண்டெடுத்த வைரம்

அமைச்சர் பெரியகருப்பன் புகழாரம்

periyakarupan about ops
தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக பதவியேற்றவர் தான் ஓபிஎஸ். இத்தனை ஆண்டுகள் அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் அங்கிருந்து புறக்கணிக்கப்பட்டு தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார். அவர் திமுகவில் இணைந்தது அந்த கட்சியினரால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் அதிமுகவினர் இதனால் ஓபிஎஸ் ஐ கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர். அதிமுகவிற்கும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கும் ஓபிஎஸ் துரோகம் செய்துவிட்டார் என சாடி வருகின்றனர்.இருப்பினும் ஒட்டுமொத்த திமுகவினருமே ஓபிஎஸ் வருகையால் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அவரின் வருகை கட்சிக்கு மேலும் வலு சேர்ப்பதாக சொல்கின்றனர். அந்த வகையில் அமைச்சர் பெரியகருப்பன் ஓபிஎஸ் குறித்து மனதார பாராட்டி பேசியிருக்கிறார். சமீபத்தில் பெரிய கருப்பன் பேசியது என்னவென்றால், ஓபிஎஸ் அவர்களை முதலமைச்சராகவும் பார்த்திருக்கின்றேன், எதிர்க்கட்சி தலைவராக அவர் இருந்தபோதும் பார்த்திருக்கின்றேன். அதுமட்டுமல்லாமல் அவரின் கட்சியில் இருந்து அவரை புறக்கணித்தபோதும் பார்த்திருக்கின்றேன்.
எந்த நிலையானாலும் தன்னிலை மாறாது இருப்பவர் தான் ஓபிஎஸ். விசுவாசம் என்றால் அது ஓபிஎஸ் தான். அடக்கம், அன்பு போன்ற குணங்களை அவரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். அம்மையார் ஜெயலலிதா அவர்களால் கண்டெடுக்கப்பட்ட வைரம் தான்ஓபிஎஸ். அப்படிப்பட்ட ஒரு வைரத்தின் மதிப்பு எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை அவரின் மதிப்பு தெரிந்தும் கூட அவரை புறக்கணித்து இருக்கலாம்.
எங்கே அந்த வைரம் நம்முடன் இருந்தால் நமக்கு மரியாதை இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில் கூட ஓபிஎஸ் ஐ எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து இருக்கலாம். இப்படிப்பட்ட ஒரு வைரத்தை மதிக்கக்கூடிய, அந்த வைரத்தின் மதிப்பை உணரக்கூடிய ஒரு தலைவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின். ஓபிஎஸ் என்ற வைரத்தை உணர்ந்த தலைவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் தன் கிரீடத்தில் ஓபிஎஸ் என்ற வைரத்தை பாதிக்க செய்து ஜொலிக்க செய்திருக்கின்றார் என்றே சொல்லலாம்.
அரசியலில் சாதாரண ஒரு பதிவு கிடைத்ததும் அவர்கள் மாறிவிடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக பதவியேற்ற பிறகும் சட்டமன்றத்திலும் தலைமை செயலகத்திலும் முதலமைச்சருக்கான அந்த இருக்கையில் கூட ஓபிஎஸ் அமராமல் ஜெயலலிதாஅவர்களுக்கு விசுவாசமாக நன்றியுடன் இருந்தார். இவ்வாறு அடக்கம், அன்பு, விசுவாசம் என அனைத்திற்கும் இலக்கணமான ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதகாலம் தான் உள்ளது. தற்போது இந்த சமயத்தில் ஓபிஎஸ் நம்முடன் இணைந்திருப்பது திமுகவிற்கு மிகப்பெரிய செல்வாக்கை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் திமுகவின் செல்வாக்கு மேலும் அதிகரித்து வருகின்றது என ஓபிஎஸ் ஐ மனதார பாராட்டி பேசினார் பெரியகருப்பன். இவ்வாறு திமுகவினர் தொடர்ந்து ஓபிஎஸ் அவர்களை பாராட்டிக்கொண்டு வருகின்றனர்.
மறுபக்கம் அதிமுகவினர் அவரை விமர்சனம் செய்துகொண்டே இருக்கின்றனர். இதற்கிடையில் ஓபிஎஸ் திமுகவிற்காக தனது பரப்புரையை துவங்கிவிட்டார். முதல்முறையாக திமுகவிற்காக தனது சொந்த தொகுதியில் ஓபிஎஸ் பரப்புரை செய்தார். அவருக்கு வழக்கம் போல அங்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. ஓபிஎஸ் வருகை கண்டிப்பாக திமுகவிற்கு பலம் சேர்க்கும் என இதன் மூலம் தெரிய வருகின்றது.
இந்நிலையில் அதிமுகவினர் ஜெயலலிதா அவர்களுக்கு ஓபிஎஸ் துரோகம் செய்துவிட்டார். ஜெயலலிதா எந்த கட்சியை வீழ்த்துவேன் என தனது வாழ்நாள் முழுவதும் இருந்தாரோ அதே கட்சியில் ஓபிஎஸ் சேர்ந்ததால் ஜெயலலிதா அவர்களின் ஆன்மா ஓபிஎஸ் ஐ மன்னிக்காது என்கின்றனர். அதே சமயம் ஜெயலலிதா அவர்களுக்கு கடைசிவரை விசுவாசமாக இருந்தவர் தான் ஓபிஎஸ் என திமுகவினர் சொல்கின்றனர்.

அதிமுகவை அழித்தது எடப்பாடி பழனிசாமி தான்- முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் ஆவேசம்

இதனால் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என யூகிக்க முடியவில்லை. திமுகவினர் சொல்வதை ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் நம்புவார்களா ? அல்லது அதிமுகவினர் சொல்வதை நம்புவார்களா ? என தெரியவில்லை. ஆனால் ஓபிஎஸ் யின் வருகை திமுகவிற்கு பலம் சேர்த்துள்ளது என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை