Mla Rajan About Admk Vs Dmk,சசிகலா எங்களுக்கு போட்டியில்லை..அதிமுக தான் பெரிய கட்சி : எம்எல்ஏ ராஜன் – mla rajan about admk and dmk clash in 2026 elections

சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டியே என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் கூறியிருக்கின்றார். மேலும் சசிகலா எங்களுக்கு போட்டியில்லை எனவும் எம்.எல்.ஏ ராஜன் தன் கருத்தை கூறியிருக்கின்றார்

முக்கிய அம்சங்கள்:

அதிமுக -திமுக இடையே தான் போட்டி

அதிமுக எம்.எல்.ஏ ராஜன் கருத்து

mla rajan about admk vs dmk
சட்டமன்ற தேர்தலில் பலரும் மும்முனை போட்டி நிலவும் என்கின்றனர். திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் என சொல்லப்படும் நிலையில் அந்த போட்டியில் விஜய்யின் தவெகவும் இணைந்திருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஆனால் தவெகவினரை கேட்டால், சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டியே, அந்த போட்டியில் தீய சக்தி திமுகவை வீழ்த்தி வீட்டிற்கு அனுப்புவோம் என தொடர்ந்து கூறிக்கொண்டே வருகின்றனர்.மறுபக்கம் அதிமுக கட்சியெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதே தவெகவினரின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் சட்டமன்ற தேர்தலில் நிலவப்போகும் போட்டி குறித்து தன் கருத்தை பதிவு செய்திருக்கின்றார். அதுகுறித்து அவர் பேசியது, சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை மும்முனை போட்டியெல்லாம் கிடையாது.
இரண்டு முறை போட்டி தான். அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையே தான் போட்டி.திமுக மற்றும் அதிமுக என சொல்லமாட்டேன். அதிமுக மற்றும் திமுக என்று தான் சொல்வேன். ஏன்னென்றால் அனைத்து வகையிலும் அதிமுக தான் பெரிய கட்சி என பேசினார் எம்.எல்.ஏ ராஜன். அதனைத்தொடர்ந்து புதிதாக சசிகலாகட்சி துவங்கியிருக்கின்றார். ராமதாஸ் தரப்புடன் சசிகலா கூட்டணி அமைத்திருக்கிறார்.
இதைப்பற்றியும் எம்.எல்.ஏ ராஜன் பேசியுள்ளார். அவர் கூறியது, சசிகலா மீது மிகப்பெரிய அளவில் மரியாதை வைத்திருந்தோம். சசிகலாவை மதிப்பிற்குரியவராகவே வைத்திருந்தோம், அவ்வளவு தான்.ஆனால் சசிகலா எங்களுக்கு ஒரு போட்டியே இல்லை. சட்டமன்ற தேர்தலில் சசிகலா எங்களுக்கு ஒரு சதவீதம் கூட போட்டி இல்லை என பேசினார் எம்.எல்.ஏ ராஜன்.
இந்நிலையில் திமுக பெயரை முதலில் சொல்லமாட்டேன், அதிமுக -திமுக என்று தான் சொல்வேன். ஏனென்றால் அதிமுக தான் பெரிய கட்சி என எம்.எல்.ஏ ராஜன் பேசியுள்ளார். இதுகுறித்து கண்டிப்பாக விமர்சனங்கள் எழும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் வருகின்ற தேர்தலில் இருமுறை போட்டி தான் இருக்கும் என அவர் கூறியதற்கு பலரிடம் மாற்று கருத்துக்கள் இருப்பதாகவே தெரிகின்றது.
ஏனென்றால் பெரும்பாலானவர் இந்த தேர்தலில் மும்முனை போட்டி இருக்கும் என்று தான் சொல்கின்றனர். ஒருவேளை தவெகதேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருந்தால் ராஜன் சொல்வதை போல இருமுனை போட்டியாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் தற்போது தவெக தனித்து போட்டியிடுகின்றனர். எனவே கண்டிப்பாக தவெகவினர் வாக்குகளை பிரிப்பார்கள் என்று தான் தெரிகின்றது. குறிப்பிட்ட சதவீதம் தவெக வாக்குகளை பெறுவார்கள்.
கருத்துக்கணிப்புகள் சிலவற்றில் தவெக இரண்டாம் இடத்தை பிடித்து வருகின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்றே தெரிகின்றது. இன்னும் சொல்லப்போனால் நான்கு முனை போட்டியாக கூட இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சியும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே இந்த சட்டமன்ற தேர்தல் சாதாரணமாக இல்லாமல்,கடும் போட்டியை உருவாக்கும் தேர்தலாக இருக்கும் எனபதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இதனால் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் சொன்ன கருத்திற்கு சிலர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையே தான் போட்டியே என அவர் கூறினார்.

ராஜ்யசபா சீட்க்கு No சொன்ன அதிமுக? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி…!

ஆனால் அப்படியெல்லாம் இருக்காது, கண்டிப்பாக போட்டியில் தவெகவும் இருக்கும், நாம் தமிழர் கட்சியும் கூட இருக்கலாம் என்கின்றனர் பலர். இதனைத்தொடர்ந்து இனி வரும் நாட்களில் சட்டமன்ற தேர்தல் நிலவரம் எப்படி இருக்கும் ? களம் எப்படி இருக்கும் ? என்பது குறித்து ஒரு தெளிவான முடிவு தெரிய வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.