Op Ravindranath About Tvk Vijay,அரசியலில் விஜய் இப்போ தான் எலிமெண்டரி ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்காரு : ஓபி ரவீந்திரநாத் – ops son op ravindranath about his views on tvk vijay

விஜய் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் திமுகவில் இணைந்திருக்கும் ஓபி ரவீந்திரநாத் தவெக தலைவர் விஜய் குறித்து தன் கருத்தினை கூறியிருக்கின்றார்

முக்கிய அம்சங்கள்:

அரசியலில் விஜய் எலிமெண்டரி ஸ்கூல்

ஓபி ரவீந்திரநாத் கருத்து

op ravindranath about tvk vijay
விஜய் அரசியல் கட்சி துவங்கி இரண்டு வருடங்களை கடந்தாகிவிட்டது. தற்போது அவர் தனது முதல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். ஒருபக்கம் விஜய்க்கு வாக்கு வங்கி சிறப்பாக உள்ளது, 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பலர் விஜய்க்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் விஜய்யின் பக்கம் தான் உள்ளனர். எனவே கண்டிப்பாக இந்த தேர்தலில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குவார் என்கின்றனர்.அதே சமயம் சிலர், இதுவரை விஜய்யின் தவெக கட்சி இதுவரை எந்த ஒரு தேர்தலையும் சந்திக்கவில்லை. முதலில் அவர் தேர்தலை சந்திக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்கின்றனர். இவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்கள் விஜய்யின் தவெக கட்சி குறித்து போய்க்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் விஜய் தனது அரசியல் எதிரி திமுக தான் என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அதிகாரபூர்வமாக கூறிவிட்டார்.
ஒவ்வொரு அரசியல் மேடைகளிலும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்றும் கூறி வருகின்றார். தீய சக்தி திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்கின்றார். இவ்வாறு கூறி வரும் விஜய் குறித்து திமுகவினரும் பதில் விமர்சனம் செய்து வருகின்றனர். பெரும்பாலானோரின் கருத்து என்னவென்றால், அவர் முதலில் தேர்தலை சந்திக்கட்டும் என்பது தான்.இதே கருத்தை தான் ஓபிஎஸ் அவர்களின் மகனான ஓபி ரவீந்திரநாத் கூறியிருக்கின்றார்.
அவரிடம் விஜய் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா ? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விளக்கம் கொடுத்த ஓபி ரவீந்திரநாத், விஜய் தற்போது தான் தன் அரசியல் பயணத்தை துவங்கியிருக்கின்றார். அரசியல் பயணத்தை பொறுத்தவரை விஜய் தற்போது தான் எலிமெண்டரி ஸ்கூலில் படித்துக்கொண்டு இருக்கின்றார். அரசியல் களம் என்றால் என்ன ? தேர்தல் களம் என்றால் என்ன ? என்பது குறித்து தற்போது தான் விஜய் கற்றுக்கொண்டு வருகின்றார்.
தேர்தல் களம் வரட்டும்,களத்தில் யாரு உண்மையான ஹீரோ என மக்கள் நிரூபிப்பார்கள். நம் தளபதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தான் களத்தில் ஹீரோ என மக்கள் நிரூபிப்பார்கள் என கூறினார் ஓபி ரவீந்திரநாத். பலர் கூறுவதை போல இவரும், விஜய் முதலில் தேர்தலை சந்திக்கட்டும் என்று தான் சொல்கின்றார். இதைப்போல தான் மற்ற திமுகவினரும் அதிமுகவை சேர்ந்தவர்களும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் அமைக்கப்போகும் கூட்டணி குறித்து பல யூகங்கள் மற்றும் கணிப்புகள் இருந்து வந்தது. முதலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தவெக முயற்சிப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. பின் ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோருடன் கூட்டணி வைக்கலாம் என்ற கணிப்புகள் இருந்தன. ஆனால் இந்த கணிப்பு மற்றும் யூகங்களை எல்லாம் பொய்யாக்கி விஜய்யின் தவெக தனித்த போட்டியிட முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது.
பெரும்பாலானோரை பொறுத்தவரை இதுதான் விஜய் எடுத்த சரியான முடிவு என்கின்றனர். ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இடம்பெற்று இருந்தால் அவருக்கு பாதகமாக அமைந்திருக்கும் என்பதே பலரது கருத்து. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவிற்கு கண்டிப்பாக விஜய் கடும் போட்டியாக இருப்பார். தனித்து நின்றாலும் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என சொல்லப்படுகின்றது. தற்போது கூட விஜய் வருகின்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தமாட்டார் என யாரும் சொல்லவில்லை.

சீமான் செய்த சம்பவம் – தவெக vs நாதக நல்லது தான்..!

முதலில் அவர் தேர்தலை சந்திக்கட்டும் என்று தான் சொல்கின்றனர். எனவே இதன் மூலம் விஜய்யை யாரும் லேசாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது போல தான் தெரிகின்றது. என்னதான் அவருடன் யாரும் கூட்டணி வைக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் தனித்து நிற்பது அவரின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய நன்மையை உண்டாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.