Ops About Edappadi Palanisamy Delhi Visit,ஏன் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை ? அதிமுகவை விமர்சித்த ஓ.பன்னீர் செல்வம் – o.panneer selvam about eps admk current situation

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்தித்தார். தொகுதிப்பங்கீடு தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகின்றது. இதுகுறித்து பலர் விமர்சனம் செய்ய ஓ.பன்னீர் செல்வமும் விமர்சித்துள்ளார்

முக்கிய அம்சங்கள்:

ஏன் இந்த நிலைமை ?

அதிமுகவை விமர்சித்த ஓபிஎஸ்

ops about admk current situation
திமுக கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் இணைந்ததால் அவரை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்தார்கள். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதா உட்பட ஒட்டுமொத்த அதிமுகவிற்கும் ஓ.பன்னீர் செல்வம் துரோகம் செய்துவிட்டார் என அவர்கள் அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவினரை பதில் விமர்சனம் செய்திருக்கின்றார். நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லிக்கு அமித் ஷாவை சந்திக்க சென்றார்.திடீரென எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றது ஏன் ? என பல கேள்விகள் எழுந்தது. தொகுதிப்பங்கீடு குறித்து பேசுவதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றிருக்கின்றார் என விமர்சனங்கள் எழுந்தன. ஒரு காலத்தில் ஜெயலலிதா அவர்களை காண பாஜக போயஸ் கார்டானுக்கு வந்த நிலை மாறி தற்போது தொகுதிப்பங்கீட்டிற்காக அதிமுக டெல்லிக்கு சென்றுள்ளனர் என திமுகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் அதிமுகவினரும் பாஜகவினரும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித் ஷாவின் சந்திப்பு சாதாரண சந்திப்பு தான். இதில் என்ன குழப்பம் இருக்கு ? என கூறி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவை விமர்சனம் செய்திருக்கின்றார்.
ஓபிஎஸ் தற்போது தேனியில் திமுகவிற்காக பரப்புரை செய்து வருகின்றார். தொடர்ந்து தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் திமுகவிற்காக பரப்புரை செய்யவுள்ளார். முதல்முறையாக தன் சொந்த தொகுதியில் திமுகவிற்காக ஓபிஎஸ் பரப்புரை செய்கின்றார். அங்கு திமுகவிற்கு அமோகமான வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார் ஓபிஎஸ். அப்போது ஓ.பன்னீர் செல்வத்திடம், அதிமுக தொகுதிப்பங்கீட்டிற்காக டெல்லிக்கு சென்றது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், நீங்கள் அவர்களை தான் கேட்கணும், ஏன் இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்தது என்று என கூறிவிட்டு சென்றார். ஓபிஎஸ் மட்டுமல்லாமல் திமுகவினரும் திமுக ஆதரவாளர்களும் இதே கேள்வியை தான் கேட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் எப்படி இருந்த அதிமுக தற்போது இப்படி ஆகிவிட்டது என்று. ஏற்கனவே திமுகவினர் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு அவர்களை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
தமிழகத்தில் அதிமுக வெற்றிபெற்றால் அதிமுக ஆட்சி நடக்காது, பாஜகவின் ஆட்சி தான் நடக்கும், அதிமுக பாஜகவின் பிடியில் தான் உள்ளது என கூறி வருகின்றனர். இந்த சமயத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றது மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தொகுதியை தோழமை கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டிய அதிமுக அவர்களின் தொகுதிகளையே தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதாக அமைச்சர் கே.என் நேரு உட்பட பலர் விமர்சிக்கின்றனர்.

டெல்லி செல்லாத அண்ணாமலை… அமித் ஷா கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?

தற்போது ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியையும் அதிமுகவினரையும் விமர்சித்து பேசியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த விமர்சனங்களுக்கு அதிமுகவினர் என்ன பதிலளிக்க போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் நாளை அதிமுக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை துவங்க இருப்பதாக தெரிகின்றது. அநேகமாக இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.