Pmk Anbumani About Seats,ஒரு மாநிலங்களவை தொகுதி ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு சமம்..பாமகவிற்கு குறைவான தொகுதிகளா ? என்ற கேள்விக்கு அன்புமணி பதில் – anbumani about his view on pmk party seats alloted by admk

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக கட்சிக்கு 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள் குறைவா என்ற கேள்விக்கு அன்புமணி பதிலளித்திருக்கிறார்

முக்கிய அம்சங்கள்:

எண்ணிக்கைகள் முக்கியமில்லை

அன்புமணி பேச்சு

anbumani about seats
பாமக தேசிய ஜனநாயக கூட்டணி யில் பயணம் செய்து வருகின்றனர். அன்புமணி தரப்பு பாமகவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாமகவிற்கு எத்தனை தொகுதிகளை அதிமுக வழங்க இருக்கின்றனர் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்தது. கடந்த வாரம் வரை தேசிய ஜனநாயக கூட்டணி தங்களது தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை அதிகாரப்பூரவமாக துவங்கவில்லை.ஆனால் இன்றைய தினம் அதிமுக தன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து வழங்கியிருக்கின்றனர். பாஜகவிற்கு 27 தொகுதிகளை வழங்கியிருக்கும் அதிமுக அதற்கு அடுத்தபடியாக பாமகவிற்கு 18 தொகுதிகளை வழங்கியிருக்கின்றனர். பாஜகவை பொறுத்தவரை கடந்த முறையை விட இம்முறை அதிகமான சீட்களை பெற்றுள்ளனர்.
ஆனால் பாமககட்சி கடந்த முறையை ஒப்பிடுகையில் இம்முறை குறைவான தொகுதிகளில் தான் போட்டியிடுகின்றனர். பாமக குறைவான தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டது ஏன் ? என்ற கேள்வி எழுந்த நிலையில் இதுகுறித்து அன்புமணி தனது விளக்கத்தை கொடுத்திருக்கின்றார்.
அவர் பேசியது, எங்களுக்கு 18 சட்டமன்ற தொகுதிகள் உட்பட ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலங்களவை தொகுதி என்பது ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு சமமானது. அதையும் சேர்த்து பார்த்தால் 24 தொகுதிகள் கணக்கில் வருகின்றது. அது ஒன்றும் குறைவல்ல. மேலும் தொகுதிகளின் எண்ணிக்கைகளில் குறைவு மற்றும் அதிகம் என்பதெல்லாம் எங்களுக்கு முக்கியமல்ல. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே நோக்கம் திமுகவை அகற்ற வேண்டும் என்பது தான்.
தொகுதிகளின் எண்ணிக்கைகள் எங்களுக்கு முக்கியமல்ல. எங்கள் கூட்டணியின் ஒரே குறிக்கோள் திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு மாநிலமாக தமிழகத்தை திமுகமாற்றியிருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்காக தான் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கின்றோம். எங்களுடைய கூட்டணி மெகா கூட்டணி.
மிகப்பெரிய பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கின்றோம். திமுக தன எங்களை பார்த்து பயப்படுகின்றனர். பொய்யான புகார்களை எங்கள் மீது வைக்கின்றனர், பழி சுமத்துகின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவிற்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத கட்சிக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் ? கண்டிப்பாக இந்த தேர்தலில் மக்கள் திமுகவிற்கு பாடம் எடுப்பார்கள் என்றார் அன்புமணி.
இந்நிலையில் பாமகவிற்கு குறைவான தொகுதிகள் வழங்கவில்லை என அன்புமணி கூறுவதை பார்த்தால் தொகுதிப்பங்கீட்டில் அவருக்கு எந்த வித முரணும் இல்லை என்பது போல தான் தெரிகின்றது. என்னதான் கடந்த முறையை விட இம்முறை குறைவான தொகுதிகள் தான் என்றாலும் ஒரு ராஜ்யசபா சீட் பாமகவிற்கு வழங்கப்பட்டது. அது அன்புமணிக்கு நிறைவானதாக இருக்கும் என்பது போல தெரிகின்றது.

Anbumani vs Ramadoss: யார் கையில் PMK? முக்கிய அரசியல் விவாதம்

மேலும் அதிமுக, பாஜகவிற்கு அடுத்தபடியாக அக்கூட்டணியில் பாமகவிற்கு தான் அதிகப்படியான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே தொகுதி ஒதுக்கீட்டில் அன்புமணிமன நிறைவாக திருப்தியாக தான் இருப்பார் என தெரிகின்றது. இதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நிற்பதாக சொல்லப்படும் பெரம்பூர் தொகுதியை அதிமுக பாமக கட்சிக்கு ஒதுக்கியிருக்கின்றனர். ஒருவேளை விஜய் அங்கு நின்றால் அதற்கு எதிராக பாமக யாரை நிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.