Puducherry Narayanasamy Speech,என்னால் திமுக -காங்கிரஸ் கூட்டணி உடையக்கூடாது..தேர்தலில் போட்டியிடாதது குறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி – puducherry former chief minister narayanasamy about why he didnot contest in 2026 elections

புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லையாம். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகின்றது.தான் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நாராயணசாமி

முக்கிய அம்சங்கள்:

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன் ?

நாராயணசாமி விளக்கம்

narayanasamy about elections
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதது தான் தற்போது டாக்கிங் பாயிண்டாக இருக்கின்றது. புதுச்சேரி அரசியலை பொறுத்தவரை நாராயணசாமிக்கு சீட் ஒதுக்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு குறித்து இழுபறியான நிலை போய்க்கொண்டு இருந்தது. நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாதது போலவே தெரிந்தது.இதனிடையில் கூட்டணிக்கு யார் தலைமைதாங்க வேண்டும் என்பது குறித்தும் சர்ச்சை நீடித்ததாக தெரிகின்றது. ஆனால் தற்போது தொகுதிப்பங்கீட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாம். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளையும் திமுக 14 தொகுதிகளையும் பிரித்துக்கொண்டனர். திமுகவிற்கு கொடுக்கப்பட்ட 14 தொகுதியில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதற்கு உடன்படாத விசிக புதுச்சேரியில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளனர். இப்படி ஒரு பரபரப்பான சூழலில் தான் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு சீட் மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் ஏமாற்றமடைந்த நாராயணசாமியின் ஆதரவாளர்கள் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் வீட்டையும் முற்றுகையிட்டனர்.
நெல்லித்தோப்பு தொகுதியை நாராயணசாமிக்கு ஒதுக்காத நிலையில் மாநில தலைவர் பதவியில் இருந்து வைத்திலிங்கத்தை நீக்க கோரி நாராயணசாமி ஆதரவாளர்கள் தர்ணா செய்து வந்தனர். இந்நிலையில் தான் தேர்தலில் போட்டியிடாதது குறித்து நாராயணசாமி விளக்கம் கொடுத்திருக்கின்றார். அவர் கூறியது, என்னால் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி உடைவதை நான் விரும்பவில்லை. எனவே இக்கூட்டணியை காப்பாற்ற வேண்டும்.
இக்கூட்டணி உடைவதை நான் விரும்பவில்லை என என் கட்சி தலைமையிடம் தெரிவித்தேன். புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் தான் பலமாக இருக்கும் என்றேன். என்னால் இக்கூட்டணி உடையும் நிலை வந்தால் தெல்லித்தோப்பு தொகுதியில் நான் நிற்கவில்லை. நெல்லித்தோப்பு பகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்ததை திரும்ப பெற்றுக்கொள்கின்றேன். என் மனுவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என கூறியதாக நாராயணசாமி தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே ஐந்து தொகுதிகளுக்கு பிரச்சனை எழுந்தது. இதுகுறித்து கட்சி தலைமை விவாதித்தனர். என்னைப்பொறுத்தவரை காங்கிரஸ் என்கின்ற கட்சி தான் முக்கியம், தனிநபர் முக்கியமல்ல. எனவே கட்சியை கருத்தில் கொண்டும் கூட்டணியை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. என்னை சந்தித்து பேசுபவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள். கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ்கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்கள். எனக்கு ஆதரவாக அவர்கள் பேசியதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இருந்தாலும் தேர்தல் நேரத்தில் குழப்பம் நிலவ கூடாது என்பதற்காக நான் அவர்களை கேட்டுக்கொண்டேன். நான் போட்டியிடவில்லை என்பதன் ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள், அது அவர்களின் உரிமை. அதைப்போல அவர்களின் உரிமையையும் கோரிக்கையையும் கேட்கவேண்டியது என் தலைமை. இன்னும் ஓரிரு நாட்களில் கட்சியின் தலைமை இறுதி முடிவை எடுப்பார்கள் என கூறினார் நாராயணசாமி.
இந்நிலையில் நாராயணசாமி இம்முறையும் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் திமுகவினர் நெல்லித்தோப்பு தொகுதியை கேட்டு வந்ததால் பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடித்தது. இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இறுதிவரை உடன்பாடு ஏற்படாத காரணத்தால் நாராயணசாமி கடும் அத்ரிப்தியடைந்து பேச்சுவார்த்தையை விட்டு விலகியதாக சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து நெல்லித்தோப்பு பகுதியில் நாராயணசாமி போட்டியிடவில்லை என்ற தகவல் வந்துள்ளது.

காங்கிரஸ்- திமுக தொகுதி பங்கீடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி! திமுகவுக்கு காலையில் வந்த குட்நியூஸ்

இருப்பினும் தொடர்ந்து நாராயணசாமி மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.தனி நபரை விட கட்சி தான் முக்கியம் என நாராயணசாமி கூறிவிட்டு அவர் மனுவை ஏற்க வேண்டாம் என தலைமையிடம் தெரிவித்துள்ளார்.ஒரு முன்னாள் முதலமைச்சரான நாராயணசாமிக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது