Selvaperunthagai About Constituency,நான் தொகுதி மாறவில்லை..பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது : செல்வப்பெருந்தகை – selvaperunthagai says he dont change constituency in 2026 elections

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொகுதி குறித்து பேசியிருக்கிறார். கடந்த சில தினங்களாக அவர் தொகுதி மாற இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அந்த தகவலை அவர் மறுத்திருக்கிறார்

முக்கிய அம்சங்கள்:

தொகுதி மாறவில்லை

செல்வப்பெருந்தகை பேச்சு

selvaperunthagai about constituency
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீட்டில் ஒருவழியாக சுமுகமான முடிவு எட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு திமு =க 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை வழங்கினார்கள். கடந்த முறையை விட காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக மூன்று தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் கூடுதலாக தொகுதிகளை வழங்கிவிட்டு, புதிதாக வந்த கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை வழங்கிவிட்டு, எங்களுக்கு குறைவான தொகுதிகளை வழங்கி இருப்பதாக தோழமை காட்சிகள் சிலர் கூறினார்களாம்.ஆனால் செல்வப்பெருந்தகை இதுகுறித்து பேசுகையில், உங்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்டு பெறுவது உங்களுடைய உரிமை. ஆனால் எங்களை ஒப்பிட்டு தொகுதிகளை கேட்காதீர்கள், நூறு தொகுதிகளுக்கு மேல் பெற்ற நாங்கள் இன்று 28 தொகுதிகளை நான் பெற்றுள்ளோம். எனவே எங்களின் வேதனையை தோழமை காட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தான பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கின்றதாம். இதற்கிடையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தொகுதி மாற இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இருந்து சென்னை எழும்பூர் தொகுதிக்கு செல்வப்பெருந்தகை மாற இருப்பதாக செய்திகள் வந்தன.
கடந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றிபெற்ற செல்வப்பெருந்தகை இம்முறை சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது இந்த தகவலை செல்வப்பெருந்தகை மறுத்துள்ளார். நான் தொகுதி மாறவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார் செல்வப்பெருந்தகை.
மேலும் பேசிய அவர், நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து திமுகவிடம் பேசி வருகின்றோம். பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க்கொண்டு இருக்கின்றது. நாங்கள் கேட்கும் தொகுதிகளைதிமுகவும் கேட்கின்றனர். அதைப்போல அவர்கள் கேட்கும் சில தொகுதிகளை நாங்களும் கேட்டு வருகின்றோம். இருந்தாலும் சுமுகமான முறையில் தான் பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கின்றது. இன்னும் சில தினங்களில் தொகுதிகள் உறுதியாகிவிடும் என கூறினார் செல்வப்பெருந்தகை.
இதன் மூலம் செல்வப்பெருந்தகைதொகுதி மாறவில்லை என தெரிகின்றது. இம்முறையும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி விருப்பப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதைப்போல திமுகவும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றே தெரிகின்றது.
இப்படியான நிலையில் செல்வப்பெருந்தகை கடந்த முறையை போல இம்முறையும் அநேகமாகா ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இறுதி முடிவு எட்டப்படும் என தெரிவித்திருக்கின்றார். அதன் பிறகு தலைமை அதிகாரபூர்வமாக யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பதை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செங்கோட்டையன் பேச்சு… அதிமுகவில் நடக்கவுள்ள மாற்றங்கள்- புகழேந்தி

இந்நிலையில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதம் கூட கால அவகாசம் இல்லை என்பதால் அனைத்து வேலைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. விரைவில் பிரச்சார வேலைகளையும் அனைத்து கட்சிகளும் துவங்க இருக்கின்றார்கள்.அதற்கான பேச்சுவார்த்தையும் போய்க்கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஒருபக்கம் அதிமுக கூட்டணியில் வேட்பாளர்கள் உறுதிசெய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் திமுக கூட்டணியும் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.