“அசாமில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்”

குவாஹாட்டி: அ​சாமில் பொது சிவில் சட்​டம் கொண்டு வரப்​படும். இதன் மூலம் ஊடுரு​வல்​காரர்​கள் 4 முறை திரு​மணம் செய்து கொள்​வது தடுக்​கப்​படும் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறி​னார்.

அசாம் சட்​டப்​பேர​வைக்கு ஒரே கட்​ட​மாக வரும் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அசாமின் கோல்​பாரா மாவட்​டம் துத்​னோ​யில் பாஜக சார்​பில் நேற்று நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்று பேசி​ய​தாவது: அசாமில் பழங்​குடி​யினர் மேம்​பாட்​டுக்​காக பிரதமர் நரேந்​திர மோடி​யும், முதல்​வர் ஹிமந்தா பிஸ்வா சர்​மா​வும் ஒரு விரி​வான செயல்​திட்​டத்தை தயாரித்​துள்​ளனர். இங்கு பாஜக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால்​தான் அதன் முழு​மை​யான அமலாக்​கம் சாத்​தி​ய​மாகும். எனவே நீங்​கள் பாஜக​வுக்கு வாக்​களிக்க வேண்​டும்.

Source link