அதிபரை ஓரம்கட்டிவிட்டு ஈரான் அரசு அதிகாரத்தை கையில் எடுக்கிறதா இஸ்லாமிய காவல்படை? | Iran war

உச்ச தலைவர் நேரில் இல்லாத சூழலில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரிகள் அடங்கிய இராணுவ கவுன்சில் முக்கிய போர் முடிவுகளை எடுத்து வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை இப்போது இந்த படையே முழுமையாக நிர்வகித்து வருகிறது.

இதற்கிடையே வளைகுடா நாடுகளைத் தொடர்ந்து இலக்கு வைக்கும் IRGCயின் போக்கிற்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் எதிராக இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் பேச்சுவார்த்தையை விரும்புவதாகவும் எனவே அவரின் மிதவாத போக்கு காரணமாக அவரை பெயரளவிலான அதிபராக மட்டும் இருக்கும்படி ஓரம்கட்டிவிட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துள்ளதாக ஈரான் இன்டர்நேஷனல் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

அதிபர் பெசெஷ்கியன் உச்ச தலைவரைச் சந்திக்கக் கோரிய கோரிக்கைகளை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தொடர்ந்து நிராகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Source link