அன்று அன்பு சொன்னது… இன்றும் அய்யா செய்வதும்..!

பாமக தலைவர் பதவியில் 25 ஆண்டுகளாக இருந்த ஜி.கே.மணியை நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு மகன் அன்புமணியை கொண்டு வந்தார் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

அதிருப்தியில் இருந்த ஜி.கே.மணியை சரி கட்ட, அவரது மகன் தமிழ்குமரனுக்கு, அன்புமணி வகித்த மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை வழங்கினார். இதை அன்புமணி எதிர்த்தார். இந்த எதிர்ப்பை, ராமதாஸ் பொருட்படுத்தவில்லை.

குடும்ப உறுப்பினர்களின் தலையீடு காரணமாக, தமிழ்குமரனை நீக்கவிட்டு, மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியில் மகள் ஸ்ரீகாந்தியின் மகனான பேரன் முகுந்தனை கொண்டு வந்தார். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, மேடையிலேயே மைக்கை தூக்கி வீசி அதிர்வலையை ஏற்படுத்தினார்.

Source link