அமராவதி: "13 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை

அமராவதி: ’13 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யப்படும்’ என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இது தொடர்பாக, சட்டசபையில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யப்படும். 13 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடையை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தீவிரமாக விவாதித்து வருகிறோம்.

13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம். இந்த திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆலோசனைகளுக்குப் பிறகு மேலும் முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

கர்நாடகாவிலும்…!
@@subtitle
@@

ஏற்கனவே, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கர்நாடகா அரசு தடை செய்யும் என இன்று பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா பேசுகையில் தெரிவித்தார். இது தொடர்பான செய்தி தினமலர் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Source link