ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால் உலகளவில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சில நாடுகள் அவசர நிலையை அறிவிக்கும் முடிவுக்கு சென்றிருக்கின்றன. இந்தியப் பிரதமர் மோடியும், இன்னொரு லாக்டவுன் நிலைக்கு தயாராக வேண்டும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பத்திரிகைச் செயலாளர், “ஈரானிடம் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இது தொடர்பாக பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்கா யோசனைகளை அனுப்பி வருகிறது. ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவ்வாறு செய்யும் நோக்கமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.ட்ரம்பின் திட்டம் என்ன?இஸ்ரேலின் சேனல் 12-ன் படி, போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா கேட்டிருக்கிறது. அதாவது, ‘ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதாக உறுதியளிக்க வேண்டும். அணுசக்தி நிலையங்களைக் கலைப்பதாக உறுதியளிக்க வேண்டும். மேலும் ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைக்க வேண்டும். இந்த முகமைதான் இனிவரும் காலங்களில் இந்த விவகாரத்தைக் கண்காணிக்க வேண்டும்.டொனால்டு ட்ரம்ப் கூடுதலாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹூதிகள் போன்ற பிராந்தியத்தின் மறைமுக ஆதரவு அமைப்புகளுக்கு நிதியளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்.மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு சுதந்திரமான கடல்வழிப் பாதையாக செயல்பட வைப்பதற்காக, அதை மீண்டும் திறக்க வேண்டும். இதற்கு ஈடாக ஈரான் மீதான அனைத்து சர்வதேசத் தடைகளும் நீக்கப்படும்’ உள்ளிட்ட முடிவுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்.
