டெஹ்ரான்: சில நாடுகள் மத்தியஸ்தம் செய்வது குறித்து எங்களிடம் பேசுகின்றன. ஆனால், அவர்கள் போரை துவக்கிய அமெரிக்கா, இஸ்ரேலிடம் தான் பேச வேண்டும் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல் 7வது நாளை கடந்துள்ளது. இதில் ஆட்சியாளர் கமேனி, அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சில நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளை துவக்கியுள்ளன. இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க தயங்க மாட்டோம். ஈரான் மக்களை குறைத்து மதிப்பிட்டவர்களையும், இந்த போரை துவக்கியவர்கள் மீதும் தான் மத்தியஸ்தர்கள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
