துபாய்: ஈரானின் தேசிய பாதுகாப்பு குழு செயலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அல்லது பதற்றத்தை தணித்தல் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என புதிய ஆட்சியாளரான மொஜ்தாப் கமேனி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பதற்றத்தை தணிக்க வேண்டும் அல்லது அமெரிக்கா உடன் போர் நிறுத்த ஒப்பந்ததம் மேற்கொள்ள வேண்டும் என இரண்டு நாடுகள் ஈரான் வெளியுறவு அமைச்சகத்திடம் முன்மொழிவு ஒன்றை வைத்தது.
ஆனால், வெளியுறவு கொள்கை குறித்த கூட்டத்தில பேசிய புதிய ஆட்சியாளரான மொஜ்தாப் கமேனி, ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மண்டியிடும் வரை அல்லது தோல்வியை ஒப்புக் கொண்டு இழப்பீடு வழங்கும் வரை போர் தொடரும். அமைதிக்கு இது சரியான நேரம் அல்ல’ என தெரிவித்துள்ளார். இதனை ஈரான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால், அந்த கூட்டத்தில் மொஜ்தபா கமேனி பங்கேற்றாரா இல்லையா என்பது பற்றி அவர் கூறவில்லை. இவ்வாறு அந்த ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
