இந்த சூழலில், 48 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒரு நட்பு நாட்டின் வாயிலாக, அமெரிக்கா கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து அமெரிக்காவிடமிருந்து எந்தக் கருத்தோ அல்லது உறுதிப்படுத்தலோ வெளியாகவில்லை. இந்த சூழலில், அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துவிட்டதாக, ஈரானின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரானின் இந்த நிலைப்பாடு, போர் தொடர்ந்து கடுமையடைந்து வருவதை காட்டுகிறது. போரை நிறுத்துவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்த அதே வேளையில், ராணுவ மோதல்களும் கடுமையாகத் தீவிரமடைந்துள்ளன.
