”அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை”- தஞ்சாவூரில் ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்டி போராடிய விவசாயிகள்!- sugarcane farmers against protest in stalin

இந்நிலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சாவூர் திலகர் திடலில் நடந்த பொதுகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் வந்தார். அப்போது, விவசாயிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினர். மேலும் ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருப்பு கொடிகளை கைப்பற்றிய போலீஸார் கரும்பு விவசாயிகளை கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கரும்பு விவசாயிகள் போராட்டம்

கரும்பு விவசாயிகள் போராட்டம்

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.115 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம் மோசடியாக விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன்களை எந்த நிபந்தனையுமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். ஆலை நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்ததும், எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் எங்கள் எதிர்ப்பை காட்டினோம்” என்று தெரிவித்தனர்.

Source link