சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதனடிப்படையில் பிப்ரவரி மாத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் அருந்ததி ரெட்டி வென்றார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தார். 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் சாய்த்தார்.
முதல் போட்டியில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 2-வது போட்டியில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3-வது மற்றும் கடைசி போட்டியில் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.
