வாஷிங்டன்: “ஈரானில் இனி அழிப்பதற்கு ஒன்றுமில்லை, எப்போது வேண்டுமானாலும் நான் போரை நிறுத்துவேன்,” என அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 12 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரான், கச்சா எண்ணெய் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதையை முடக்கியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், “ஈரானில் இனி அழிப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. சொர்ப்பமாக ஏதேனும் மிச்சம் மீதி இருக்கலாம். அதனால் எப்போது வேண்டுமானாலும் நான் இந்த சண்டையை நிறுத்துவேன்,” என்றார்.
