“அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்” – சுவாரஸ்யம் பகிர்ந்த மம்மூட்டி!

மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘லோகா சாப்டர் 1; சந்திரா’. இப்படத்தை துல்கர் சல்மானின் ‘வேஃபாரர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. டாமினிக் அருண் இயக்கியிருந்த இப்படத்தில் நஸ்லன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் சிறப்பு வேடங்களில் நடித்திருந்தனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்த இப்படம் குறுகிய நாட்களிலே ரூ.100 கோடி வரை வசூலித்தது. 

இதன் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு இந்திய படம் முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. இப்போது மலையாளத் திரையுலகிலே அதிக வசூலித்த படமாக ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகம் டொவினோ தாமஸ் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த 5 பாகங்கள் உருவாக்க திட்டமிடப்படுகிறது. 

முதல் பாகத்தில் ‘மூத்தோன்’ என்ற கதாபாத்திரம் வரும். முகம் தெரியாமல் கை மட்டும் தோன்றும் கதாபாத்திரமாக இக்கதாபாத்திரம் வரும். இதற்கு குரல் கொடுத்தவர் மம்மூட்டி. இது குறித்து சுவாரஸ்ய தகவலை தற்போது பகிர்ந்துள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்தில் பேசிய அவர், “ஆரம்பத்தில், நானும் படத்தில் இருக்கிறேன் என்பதை அவர்கள் சொல்லவில்லை. துல்கர் சல்மான் நேரில் வரவில்லை. அவருடைய நண்பர் ஒருவர் வந்து, ஒரு குரல் கொடுக்க முடியுமா என்று கேட்டார். அந்தக் குரல் வேண்டாம் என்பது. அதைத்தான் நான் செய்தேன். படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கை கூட என்னுடையது அல்ல. படம் வெளியான பிறகுதான், ‘அது நீங்கள் தான் என்றும் அந்த கையும் உங்களுடையது தான் என்றும் சொன்னார்கள். இப்போது, ​​அந்த படத்தில் நடிப்பது என்னுடைய பொறுப்பாக மாறிவிட்டது. சொல்லப்போனால், அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். அதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் கதை” என்றார். 

Source link