ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்வு 

சென்னை: தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம், சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,400 ரூபாய்க்கும், சவரன், 1,15,200 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 14,560 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்து, 1,16,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை.

Source link