’ஆயுள் தண்டனை தானே விதிக்கும் என ஏளனமாக நினைப்பார்கள்’- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி பேசியது என்ன?

கடந்த 2020 ஜூன் 19 ல் சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ்ஸை  காவல்துறை விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர்,  சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்களான முருகன், சாமத்துரை, காவலர்களான முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் 5 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த காவல் மரண வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  9 காவலர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவதாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்ததோடு தண்டனை விவரங்கள் மார்ச் 30 ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்றார். இதனிடையே 30 ஆம் தேதி தொடர்ந்து இரு தரப்பினரின் இறுதி வாதங்களையும், கேட்ட நீதிபதி 6 ஆம் தேதி தண்டனை அறிவிப்பை ஒத்தி வைத்திருந்தார்.

Source link