இது குறித்து அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் தேர்தல் பணி குறித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடக்கும் நேரத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், தேர்தல் பணியை தடுக்கும் விதமாகவும் ஆளுங்கட்சியான திமுகவின் நிர்பந்தத்தின் பேரில் அம்மா கோயிலில் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
இதுவரை 5 முறை சோதனை நடத்தினாலும், எவ்வித பொருட்களும் அவர்கள் எடுக்க முடியவில்லை.எங்களது தேர்தல் பணியை தடுக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து அதிகாரிகளை நிர்பந்தம் செய்கின்றனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் இடங்கள், அலுவலகங்களில் இது போன்ற சோதனை நடத்துவதில்லை.
