புதுடில்லி: ஒவ்வொரு பெண்ணும்இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு பங்களிக்க உதவும் வாய்ப்புகளை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பெண் சக்தியின் சாதனைகள் பெருமைக்குரியதாகவும், தேசத்தை கட்டியெழுப்புவதில் மாற்றத்தை ஏற்படுத்தும் பங்கை வகிக்கிறது. இந்தியா மேலும் முன்னேறும்போது, பெண்களின் விருப்பங்களும் பங்களிப்புகளும் வளமான தேசத்தை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்தும்.
சர்வதேச மகளிர் தினத்தன்று, நமது அனைத்து பெண் சக்திகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு துறையிலும், பெண்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக ஒப்பிடமுடியாத வைராக்கியத்துடனும் திகழ்கின்றனர். அவர்களின் சாதனைகள் நமது தேசத்தை ஊக்குவிக்கின்றன. மேலும் ஒரு வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது பயணத்தை வலுப்படுத்துகின்றன.
பெண்களுக்கு அதிகாரமளிக்க பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தனது முழு திறனையும் உணர்ந்து இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு பங்களிக்க உதவும் வாய்ப்புகளை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் அடிமட்டத்தில் இருந்த பெண்களின் வாழ்க்கை எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பது தெரியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
