மும்பை: பிரிட்டனில் உள்ள சட்ட நடவடிக்கைககள் காரணமாக, தற்போதைய நிலையில் இந்தியா திரும்புவது குறித்து உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
மும்பை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் தாக்கல்செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளதாவது: பிரிட்டன் மற்றும் வேல்சை விட்டு வெளியேறக்கூடாது எனு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு முயற்சி செய்யவோ அல்லது சர்வதேச பயணத்திற்கான ஆணவங்களை வைத்து இருக்கவோ அல்லது அதற்கக விணணப்பிக்க கூடாதுஎனுவும் உத்தரவிட்டு உள்ளது. இது போன்ற கட்டுப்பாடுகளால், இந்தியா திரும்புவதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை கூற முடியாத நிலையில் உள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது.
விஜய் மல்லையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கூறுகையில், விஜய் மல்லையா நேரில் வர முடியாத சூழ்நிலையில் உள்ளதால் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட வழக்குகளில், மனுதாரர்கள் வர முடியாத சூழ்நிலையிலும் விசாரணையை தொடரலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.வழக்கு பின்னணி
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தாக வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து 2016 ல் அவர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றா். 2019 ல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவித்தது. இதனை எதிர்த்தும், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் இரு மனுக்களை மும்பை உயர்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்தார்.ஆனால், அவர் நாடு திரும்பினால் தான் மனுக்களை விசாரிக்க முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
