இதன் மூலம், அதிமுக களத்திலேயே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க நினைத்தார் அவர். ஆனால், திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையில் இப்போது நடக்கும் அதிரடி தாக்குதல் பிரச்சாரமானது அதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, போட்டி திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையில் தான் என்ற இலக்கை நோக்கி நகர்த்தி வருகிறது.
தவெக-வைப் பொறுத்தவரை அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை விட விஜய் மீதான மக்களின் ஈர்ப்பு மட்டுமே அந்தக் கட்சியின் பிரதான சொத்தாக இருக்கிறது. இலவசங்களை எதிர்க்கும் நாதக, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நிர்வாக மேலாண்மை என கவலைப்படுகிறது. அதனால் அந்தக் கட்சி யதார்த்த அரசியலை விட்டு ஒதுங்குகிறது. அதேசமயம், திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பேசு பொருளாக இருக்கிறது. ஸ்டாலின் வந்தால் சொன்னதைச் செய்வார், எடப்பாடி வந்தால் செய்வாரா? என்ற வாதப் பிரதிவாதங்களும் பெண்கள் மத்தியில் களைகட்டுகின்றன.
