ஈரானிடமிருந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல்

2018-ல் அமெரிக்காவின் தடைகள் கடுமையாக்கப்படுவதற்கு முன்பு, ஈரான் லைட் மற்றும் ஈரான் ஹெவி ஆகிய இரண்டு வகை எண்ணெய்களையும் இறக்குமதி செய்து, ஈரானிய கச்சா எண்ணெயின் மிகப்பெரிய வாங்கும் நாடாக இந்தியா இருந்தது. அப்போது ஈரானிய கச்சா எண்ணெய் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சுமார் 11.5 சதவீதமாக இருந்தது.

பின்னர், அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்த பிறகு, ஈரானிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தியது.

தற்போதைய போர் காரணமாக ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா பல தளர்வுகளை அறிவித்துள்ளதால், மீண்டும் இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளது.

Source link