மேலும் பேசிய அவர், “இந்தப் போரை முடிக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும் என்று கணித்திருந்தோம். ஆனால் 26 நாட்களிலேயே இலக்குகளை விஞ்சி, கால அட்டவணையை விட வெகுவாக முன்னேறியுள்ளோம். ஈரானியர்கள் மோசமான போர்வீரர்கள், ஆனால் சிறந்தப் பேச்சாளர்கள். ஈரான் தனது அணுசக்தி கனவுகளை நிரந்தரமாகக் கைவிட்டால் மட்டுமே புதிய பாதை பிறக்கும், இல்லையெனில் அமெரிக்கா அவர்களின் மிக மோசமான கனவாக” மாறும்” என்று தெரிவித்துள்ளார்
இதற்கிடையே, அமெரிக்கா முன்வைத்துள்ள 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்று ஈரான் தெரிவித்துள்ளது. தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகளை ஏற்க ஈரான் தயக்கம் காட்டி வருகிறது.
