ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவர்கள் 40 பேர் பலி

டெஹ்ரான்: தெற்கு ஈரானில் உள்ள பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் மாணவர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தலைநகர் டெஹ்ரானில் ஏராளமான கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. பல இடங்களில் குண்டுமழை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஈரான் அறிவித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,தெற்கு ஈரானில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து நடத்தது. பள்ளியில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல், அமெரிக்கா நடத்த தொடங்கியதும் அங்கிருந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனாலும் இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

மாணவர்கள் உயிரிழந்ததை ஈரானின் அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஈரானின் எதிர் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் துபாய், சவுதியின் ரியாத்தில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தங்கள் வான்வெளியை மூடிவிட்டன. ஜோர்டானில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரில், ஒரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Source link