ஈரான் பாதுகாப்பு செயலராக முன்னாள் தளபதி நியமனம்

ஈரானில், ராணுவம், அணுசக்தி, வெளியுறவு கொள்கை முடிவுகள் எடுக்கும் மிகவும் உயரிய அமைப்பாக, உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. இதன் செயலராக இருந்த அலி லாரிஜானி, சமீபத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு, இஸ்லாமிய புரட்சிகர போலீஸ் படையின் முன்னாள் தளபதியான முகமது பாகெர் ஜோல்காதிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இந்த நியமனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், இஸ்லாமிய புரட்சிகர போலீஸ் படையின் முக்கியத்துவத்தையும் இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Source link